Monday, 16 March 2015

அதிர்ஷ்டமான நேரம் (numerology research )-6


இனிசியாலஜி (Initiology)

ஒருவருடைய பெயரில் ஆரம்ப எழுத்து எனவும் தந்தையாரின் ஆரம்ப எழுத்து எனவும் எடுத்துக் கொள்வது. இத்தகைய இனிசியலில் எனப்படும் எழுத்திற்கு ஒருவருடைய தலையெழுத்து மற்றும் வல்லமை உண்டு.
இனிசியலாவது முறைப்படி ஒருவருடைய பெயருக்கான பலனை பகுத்துக் கூறும்பொழுது, வெளிப்படும் இனிசியலில் உள்ள கிரகம் ஒருவருடைய கிரகச் சூழலில் ஒரு பாகமாக செயல்படும். ஒருவருடைய பெயர் இயக்கத்தில், இனிசியலுக்கு என்று ஒரு முக்கிய இடம் உண்டு.
இனிசியல் என்பது ஒரு கிரகம் அந்தக் கிரகத்திற்கும் வலிமை உண்டு. அந்த கிரகத்தை மையமாக வைத்து செயல்பாடுகளும் நிகழ்கிறது. அதே கிரகத்தை மையமாக வைத்து நோய்களும் ஏற்படுகிறது என ஆய்வாளர் கூறுகிறார். இங்கு ஆய்வாளர் இனிசியல் என குறிப்பிடுவதற்கு காரணம் குழப்பமில்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே.

பெயர் எண்  கிரகம்இனிசியல் எண்  கிரகம்மொத்த எண்  கிரகம்

ஒருவருடைய உடலில் இனிசியலில், பெயர், மொத்த எண் இம்மூன்றும் ஒன்றன்பின் ஒன்றாக  துரியம் எனப்படும் Cerebral Cortex எனப்படும் சக்கரம் வாயிலாக செயல்பாட்டிற்கு தயாராகிறது.
உதாரணத்திற்கு,
G. K U M A R
3. 2 6 4 1 2
3 + 15  = 18
இனிசியல் - 3 = குரு
பெயர் - 15  = 6 சுக்கிரன்
மொத்த எண். 18 = 9 = செவ்வாய்
முதலில் இனிசியல் மூளையில் பதிந்து பிறகு மேல்மனம், அடிமனம், ஆழ்மனம் கருமையம் என படிப்படியாக பதிவாகி ஜீவ காந்தமாக செயல்பட்டு உடலை இயக்கிக் கொண்டே, வான்காந்த பதிவாகி பிரபஞ்சத்தோடு தொடர்பு ஏற்படுத்தி வருகிறது.
இனிசியலின் இயக்கம் அந்தந்த கிரகத்தின் தன்மையை பொருத்து குறிப்பிட்ட காலம் இயங்கி பிறகு பெயரின் பதிவு செயல்பட ஆரம்பிக்கும் பிறகு மொத்த எண்ணினுடைய  பதிவு செயல்பட தொடர்ந்து எண்ணினுடைய பதிவு செயல்பட தொடர்ந்து மாற்றி, மாற்றி செயல்பட்டு கொண்டே இருக்கும்.
மேலே குறிப்பிட்டபடி முதலில் குரு கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்படுவார்.
பிறகு சுக்கிரனின் ஆதிக்கத்திற்கு உட்படுவார். இவ்வாறு மாறி மாறி இதே கிரகங்களின் ஆளுமையில் அவருடைய வாழ்க்கை சக்கரம் சுழன்று கொண்டிருக்கும்.
K.K  R A J A S E K A R
2 2  2 1 1 1 3 5 2 1 2  = 7
4  +  18  =  22
இனிசியல்  1+7 = 4 
பெயர் மொத்த எண்

S.M  J A Y A B H A R A T H I
3 4   1 1 1 1 2 5 1 2 1 4 5 1
7+    24        = 31
72 + 4  =  6    3 + 1  = 4
இனிசியல் பெயர் எண் மொத்த எண்.
இவ்வாறு பெயரை மூன்றாக பிரித்து இனிசியலின் பலத்தையும், பலவீனத்தையும் அறிந்து ஒரு எழுத்தை கூட்டியோ குறைத்தோ நம் வாழ்க்கையை சரி செய்து கொள்வது ஊர் பெயரின் முதலெழுத்தையோ, தாயாரின் பெயரின் முதல் எழுத்தையோ சேர்த்து வலிமைப்படுத்திக் கொள்வது வழக்கம்.
இனிசியல் என்பது ஒரு ரயிலுக்கு டிரைவரை போன்றது. இனிசியலுக்கு என்று ஒரு வலிமை உண்டு.

NAMELOGY (பெயரியல்)

ஒருவருடைய பெயர் எல்லோராலும் கூப்பிடும் பெயராகவும் இருக்கலாம். அல்லது கையெழுத்திடும் பெயராகவும் இருக்கலாம். இதில் கையெழுத்திடும் பெயருக்குத்தான் வலிமை மிக மிக அதிகம். கூப்பிடும் பெயர் 4 வயது வரை மட்டுமே வேலைசெய்யும். பிறகு அவர்கள் தனது மூளையில் தன் பெயரின் எழுத்துக்களை பதிக்க செய்கின்ற பொழுது அத்தகைய பதிவின் செயல்பாடு வலிமையாக செயல்படுகிறது.
ஒருவருடைய பெயர் எவ்வளவு வலிமையாக உள்ளதோ அந்தளவிற்கு அவருடைய செயல்பாடுகளில் வலிமை அதிகமாக இருக்கும். ஒருவரை குறிப்பிடும் பொழுது இன்னார் என அவருடைய பெயரை குறித்து தானே பேசுகிறோம். பெயரை வைத்து தான் அவருடைய உருவத்தையும் நம் மனம் எடுத்துக் காண்பிக்கிறது. பெயர் மகா வலிமை பொருந்தியது. சிலர் இனிசியல் என தனியாக இல்லாமல் பெயரை மட்டும் கையெழுத்தாக இடுவது உண்டு.
ஒருவருடைய பெயரை விட்டு விட்டு அவரைப் பற்றி சிந்தித்து பாருங்கள் எதுவும் நினைவில் கொள்ள இயலாது. பெயரே அவராகவும், அவரே பெயராக அமைந்துள்ளது. அவர் இல்லை என்றாலும் பெயர் இவ்வுலகில் நிலைத்து நிற்கும். அத்தகைய பெயரை பெற்றுக் கொள்வது மிக மிக அவசியம். நம்மோடு பல பெயர்கள் வாழ்கிறது. பெயர்களுக்குரியவர்கள் இல்லை. குறிப்பாக எம்.ஜி.ஆர்., ஜவஹர்லால் நேரு, காந்திஜி ... என பல பெயரை நாம் இன்றும் உபயோகிக்கிறோம். அத்தகைய பெயரை பெற பெருந்தவங்கள் பெரிய அதிர்ஷ்டங்கள் செய்திருக்க வேண்டும். இத்தகைய பெயரை பெறுவதற்கு என்ன பிரதிபலன் செய்தாலும் ஈடாகுமா என்றால் கண்டிப்பாக ஈடாகாது. பெயரே நாமாகவும் நாமே பெயராகவும் இருந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய பெயருக்கு ஒரு பலன் உண்டு. இத்தகைய பெயரே நம்மை ஆளுமைப்படுத்துகிறது. நம் செயல்பாடுகளுக்கு முக்கிய அங்கம் வகிக்கிறது என்றால் அதை நாம் எவ்வாறு உள்ளது என அறிய வேண்டாமா? இதுவே பகுத்தறியும் தன்மையில் ஒரு பாகமாகும்.
இதில் இனிசியல் இல்லாமல் பெயருக்கு என்று ஒரு கிரகம் உண்டு. பெயருக்கு என்று ஒரு வலிமை உண்டு. இத்தகைய பெயருக்குரிய கிரகம் பிறந்த தேதியோடு ஒப்புமையாக அமையும் பட்சத்தில் மேலும் நன்மைகள் ஏற்படும். பெயருக்கு ஆரம்ப எழுத்து உண்டு. முடிவு எழுத்து உண்டு. எத்தகைய எழுத்துக்களை மாலையாக தொகுக்கப்பட்டுள்ளது என்பதை பொருத்தும் அதன் வலிமையை கூறமுடியும்.
இனிசியல் டிரைவர் என்றால் பெயர் இன்ஜினை போன்றது. ஒரு ரயிலுக்கு டிரைவரும் முக்கியம். இன்ஜினும் முக்கியம் என்ற அடிப்படையில் இன்ஜினின் தன்மையை பொறுத்தே டிரைவர் தனது வேலையை செயல்படுத்த முடியும். இனிசியலுக்கு என்று தனித்தன்மை உண்டு. அது பெயரின் தன்மையை பொறுத்தே அதன் செயல்பாடு அமையப்பெறும்.

பஞ்சபூதம்(EARTHETIC  FIVE  ELEMENTS)

ப்ருதிவி
- திரு.ாஞ்சி
அப்பு
திருவானைகாவல்
தேயு
- திருவண்ணாமலை
வாயு
- திருக்காளத்தி
ஆகாயம்
- சிதம்பரம்

இந்த உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. அவை நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் என்பனவாகும். இதன் தோற்றம் விண்ணிலிருந்து காற்றாகவும், காற்றிலிருந்து நீர் ஆகவும், நீரிலிருந்து நெருப்பாகவும், நெருப்பிலிருந்து எரிமலை குழம்பு மூலம் நிலமாக பரிணாம வளர்ச்சியை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இத்தகைய பஞ்சபூதங்களின் தொடர்புகள் தான் நம் உடலிலும் அமையப் பெற்றுள்ளது. ஜீவ உயிர்கள் யாவும் பஞ்ச பூதங்களால் ஆனது. ஜடப் பொருட்கள் என்று கூறப்படுவது பஞ்சபூதங்களால் ஆனது. அந்த காலத்தில் பஞ்சபூதங்களை தெய்வங்களாக கொண்டாடினார்கள். நாம் தெய்வமாக கொண்டாடும் ஒவ்வொரு சடங்கிற்குள்ளும் பல சூட்சும முடிச்சுகளை போட்டு வைத்துள்ளனர். அதன் அருமை, பெருமைகளை எண்ணி வியப்படைந்து கொண்டிருக்கும் இவ்வுலகம், நம் கலாச்சாரங்களைத் தனித்து பார்வையிடுகின்றனர். நாம் அதில் உள்ள சூட்சமங்களை அறியாமல் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்கிறோம். இந்தியாவில் உள்ள ஆலயங்கள் யாவும் பஞ்சபூதங்களையும் நவக்கிரகங்களையும் மையமாக வைத்து தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த பஞ்சபூதகளில் ப்ருதவிலிங்கம் என்று அழைக்கப்படும் நிலத்திற்கு அதிபதியாக காஞ்சி அமைந்துள்ளது. நீருக்கு அப்பு லிங்கமாக திருவனைக்காவலும். சிவதலங்களில் தேயு லிங்கமாக திருவண்ணாமலை அமைந்துள்ளது. வாயு லிங்கமாக திருகாளத்தியும், ஆகாயலிங்கமாக சிதம்பரமும் அமைந்துள்ளது. இவ்வாறு பஞ்சபூதங்களை மையமாக வைத்து கோவில்கள் அமையப் பெற்றுள்ளது.
எண்கணிதத்தில் பஞ்சபூதங்களின் பங்கு மிக முக்கியமாக அமைந்துள்ளது. ஒவ்வொருவருடைய தொழில் ஆற்றலையும் உயிர் ஆற்றலையும் இயக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு மனிதனின் பிறந்த தேதியில் ஒரு பூதம் அடிப்படையாக அமையப்பெறும். அது இல்லாமல் இரண்டு பூதங்கள் பிறந்த தேதியோடு தொடர்புடையதாக கண்டிப்பாக அமையப்பெறவேண்டும். அவ்வாறு அமையுமானால் அவர் இப்பூமியில் வாழத் தகுதியுடையவராக ஆவார்.
தமிழ் எழுத்துக்களை எண்கணித முறைப்படி பஞ்சபூதத் தத்துவத்தில் ஐந்து எழுத்துக்களை மட்டும் பகிர்ந்து அளிக்கிறார்கள்.
அதாவது,
- நிலம்
- ப்ருதிவி
- 1
- நீர்
அப்பு
- 2
- நெருப்பு
- தேயு
- 3
- காற்று
- வாயு
- 4
- விண்
- ஆகாயம்
- 5
இவ்வாறு ஐந்து எழுத்துக்களை மையமாக கொண்டு பஞ்சபூதங்களுக்கிடப்படுகிறது. இந்த ஐந்து பூதங்களை மையமாக வைத்து தமிழ் எழுத்துக்களை அடக்கிவிடலாம்.
சு க் + () = நிலம் 
க் + ()= நீர்
இவ்வாறு அனைத்து எழுத்துக்களையும் வடமொழி எழுத்துக்கள் உட்பட பஞ்சபூதங்களின் அடிப்படையில் கணக்கிட முடியும்.
ச ங் க ர் 
1 2 1 2 = 6/5 =
மீதி 1 = நிலம் 

கார்த்திக் 
1 2 2 2 2 = 9/5 = 
மீதி 4 = காற்று 

ப்ரூதிவிராஜ் 
2 3 2 2 1 2 = 12/5 =
மீதி 2 = நீர் 

ஓம்பிரகாஷ்
5 2 2 1 1 2 = 13/5 =
மீதி 3 =  தீ
இவ்வாறு ஒவ்வொரு எழுத்துக்கும் உள்ள எண்ணை தொடர்புப்படுத்தி கூட்டிக் கொள்ளவேண்டும். இவ்வாறு கூட்டிய எண்ணை ஐந்தால் வகுக்க வரும் மீதியை அவருடைய பஞ்சபூதத் தன்மையாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
சங்கர் = நிலத்தின் தன்மையில் பெயர் உள்ளது.
கார்த்திக் = காற்றின் தன்மையில் பெயர் உள்ளது.
ப்ருதிவிராஜ் = நீரின் தன்மையில் பெயர் உள்ளது.
ஓம் பிரகாஷ் = நெருப்பின் தன்மையில் பெயர் உள்ளது.

காந்தி
1 2 2 =5 – 5 = 5 =
விண் 
மீதி 0 வருமானால் 5 என்று எடுத்து கொண்டு விண்ணின் தன்மையை உடையது என வைத்துக் கொள்ளவும்.

பிர்லா 
2 2 1 = 5 - 5 = 0 = 5
விண் 
ரஜினிகாந்த் 
1 2 2 1 2 2  = 10 - 5 = 0 =
விண்
இவ்வாறு கணக்கில் கொள்ளவேண்டும். ஒருவருடைய பெயர் எந்த பூதத்தின் தன்மையில் அமைந்துள்ளது என அறியலாமே.
பிறந்த தேதியில் அமைந்துள்ள பூதத்தோடு பெயரில் உள்ள பூதம் ஒப்புமையாக அமையும் பட்சத்தில் மிக உன்னத நிலையை அடைய முடியும்.
பிறந்த தேதி 1 எனில் நிலமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
2, 7, 12, 17, 22, 27, தேதிகள் நீரை அடிப்படையாக கொண்டு இயங்கும்.
3, 8, 13, 18, 23, 28
தேதிகள் நெருப்பை அடிப்படையாக கொண்டு இயங்கும்.
4, 9, 14, 19, 24, 29
தேதிகள் காற்றை அடிப்படையாக கொண்டு இயங்கும்.
5, 10, 15, 20, 25, 30
தேதிகள் விண்ணை அடிப்படையாக கொண்டு இயங்கும்.

இதில் எந்த பூதத்தின் தன்மையில் ஒருவர் பிறந்துள்ளாரோ அந்த பூதத்திற்கு சாதகமான பூதத்தின் பெயர் அமையவேண்டும்.உதாரணத்தில் நீரின் தன்மையில் பிறந்தவருக்கு நெருப்பின் தன்மையில் பெயர் அமையக் கூடாது. நீருக்கு, நெருப்பு எதிர்மறையான வினை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவ்வாறு பஞ்சபூதங்களை அடிப்படையாக கொண்டு பெயர் அமையும் பட்சத்தில் உயிர் ஆற்றலும், தொழில் ஆற்றலும் பாதிக்காமல் இருக்கும்.

ASTROLOGY (ஜாதகம்)

எண்கணிதத்தில் ஒரு அங்கமாக வகிப்பது ஜாதகம் ஆகும். ஒருவருடைய வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக ஜாதகம் அமைந்துள்ளது. ஒரு ரயிலில் தண்டவாளங்கள் அமைந்திருக்கும் நிலையில் ஒரு தண்டவாளமாக அமைந்து நிலையாக அமையப்பெற்றிருக்கும்.
ஜாதகம் என்பதே சாதகம் என்பது தான் பொருள். ஒருவருடைய வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை (சாதகமான) தெரிந்து கொள்வதற்கு பெரிதும் உதவுகிறது.
ஒரு சிலருக்கு மட்டுமே பாதகமும் அமைந்திருக்கும். அவர்களும் பயப்பட தேவையில்லை. சாதகத்தில் ஏற்படும் பாதகத்தை இயற்கையே மாற்று வழிகளை ஏற்படுத்தி அதையும் சாதகமாக்கிவிடும். அந்த இயற்கையின் செயலை நாம் செம்மையாக செய்யவிடவேண்டும். அதற்கு பெயர் சரியாக இருந்தால் தான் செயல்படும். தட்ப வெப்பநிலையின் வெளிப்பாடு எங்கு சாதகமாக அமைகிறதோ அங்கு உயிரினங்கள் மிகுந்துக் காணப்படும் என்பது இயற்கை. உலக நாடுகளில் மிக சாதகமான தட்ப வெப்பநிலை ஆசியா கண்டத்தில் மட்டுமே உண்டு என்பதாலேயே இங்கு மக்களின் எண்ணிக்கை உலக நாடுகளோடு தொடர்புபடுத்தும் பொழுது அதிகமாக இருப்பது தெரிகிறது. நம் மக்களுக்கு தலை முடி ஏன் கருப்பாக அமைந்துள்ளது எனவும், பிற நாட்டில் (வெள்ளைக்காரர்கள்) மக்களுக்கு ஏன் வெண்மையாக இருக்கிறது என்பது இயற்கையின் தற்காப்பு ரகசியம். இங்கு வெயில் அதிகம் என்பது கருப்பு நிறம் நம் மூளையை தாக்காமல் வெப்பத்தை பிரதிபலித்து விடும் என்பதால் அமையப்பெற்றுள்ளது. இதற்கு நேர் மாறாக குளிர் பிரதேசத்தில் குளிர் தாக்காமல் இருக்க வெள்ளை நிறமாக அமைந்துள்ளது.
நெகம் எதற்கு? என்றால் தற்காப்புக்காக என அடுக்கி கொண்டே போகலாம் இவ்வாறு இயற்கையே தனக்குத் தானே பாதுகாக்கும் ஒரு வேலையையும் செய்து கொள்கிறது.
ஒரு சிலருக்கு மட்டுமே பாதகமான பலன்கள் அமையப்பெறும். உதாரணமாக விஷ உணவை உட்கொள்ள வேண்டும் என அமையப்பெற்றுள்ள ஒருவர் வெளியில் தண்ணீர் குடித்தல் கூடப் பார்த்து தான் குடிப்பார். இது மற்றவர்களுக்கு "இப்படியும் ஒருவரா" எனத் தோன்றும். இது ஜாதக ரீதியாக விஷ உணவை உட்கொள்ள வேண்டும் என்று ஜாதகருக்கு நிபுணர் கூறும் பொழுது அறிவுரை கூறுவார். அப்பொழுது அவரே நான் இவ்வாறு தான் இருக்கிறேன் என கூறும் பொழுதுதான் இதன் உண்மை புலப்படும். இதையும் மீறி விஷ உணவை உட்கொள்ளும் பொழுது உடனே வாந்தி, பேதி ஏற்பட்டு வெளியேற்றிவிடும். விஷ உணவு என்பது பழைய உணவாக இருக்கலாம். பழைய எண்ணை (அ) பூச்சிகள் விழுந்தும் இருக்கலாம். இவ்வாறு தனைத்தானே தற்காத்துக் கொள்ளக்கூடிய தன்மை இயற்கைக்கு உண்டு.
இவ்வாறு சாதகமானவற்றை ஜாதகத்தின் அடிப்படையில் தெரிந்துக் கொண்டு செயல்படும் பொழுது சாதகத்தை ஊக்கப்படுத்தலாம். பாதகமான பலன்களை தவிர்ப்பதற்கும் பெயரில் அமைக்கலாம். எண் கணித நிபுணருக்கு ஜாதகம் மூலம் ஒருவருடைய இயற்கையான விதி என்ன என்பதை அறிந்து கொள்ள உதவும். இந்த இயற்கையான விதியை அடிப்படையாக வைத்து செயற்கையான விதியை அமைக்க முடியும். ரயிலில் தண்டவாளம் இரண்டும் ஒரே சம அளவு இடைவெளியில் சரியாக அமையவேண்டும். அவ்வாறு அமையும் பட்சத்தில் பிரயாணம் சிறப்பாக செய்யமுடியும். இவ்வாறு ஒரு தண்டவாளம் இன்னொரு தண்டவாளமும் ஏறுக்கு மாறாக அமையுமானால் பிரயாணம் தடைப்படும்.  இயற்கை விதியோடு செயற்கை விதி ஒன்றுக்கொன்று ஒப்புமையாக அமையவேண்டும். அமைந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.
ஜாதகம் பெயர்                     ஜாதகம் 
பெயர்

img

தண்டவாளம்         தண்டவாளம் 
   (
சரியானது)             (தவறானது )
                                                             
ஒருவர் பிறக்கும் பொழுது அவரை சுற்றி நவக்கிரகங்களும் அமையப் பெற்றுள்ளது. அதன் தாக்கம் இவருக்கும் எந்தளவிற்கு நன்மையாக அமைந்துள்ளது என்பதை அறிந்துகொள்ள எட்டு வகையாக பிரித்து உணர்வார் எண் கணித நிபுணர்.

ஒரு கிரகம் எந்த மாதிரி

ஒரு கிரகம் ஒருவருக்கு எப்படி உள்ளது என்பதை  Poor , Very Poor ,Normal , Bottom , Good , Very Good , Excellent , Top Most என எட்டு பிரிவாக பிரிந்த எந்த நிலையில் அமைந்துள்ளது என அறிவார்.
அதே போல் பன்னிரண்டு வீடுகளும் எப்படி அமைந்துள்ளது என்பதையும் பகுத்தறிவார்  தனது ஆராய்ச்சியில் தற்பொழுது யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என 12 கிரகங்களையும் 12 வீடுகளையும் பகுத்து ஆராய்ந்து எந்தத் திசைகளை சந்திக்கப் போகிறார் அதன் தன்மை, பலன் எத்தகையதாக அமைந்துள்ளது என்பதை பலனை எட்டுப் பிரிவாக பிரித்து பார்த்து Top Most ஆக அமைந்து கிரகத்தை எடுத்து அதற்கு சாதகமான கிரகத்தை எடுத்து பெயருக்கு உபயோகிக்கும் தன்மை அமைந்துள்ளது.
சாதாரணமாக 14-05-1970-ல்  பிறந்த ஒருவருக்கு கிரக நிலைகள் எப்படி உள்ளது என அறிய
1
Top most
1
V.G
2
Good
2
Good
3
Good
3
Ex
4
Poor
4
Nor
5
Ex 
5
V.G
6
V.G
6
Ex
7
Nor
7
Nor
8
Nor
8
V.G
9
Nor
9
V.G
10
Good
10
Ex
11
Ex
11
Top most
12
Nor
12
Top mo
 நடக்கும் திசை முடிய
7=
29-08-1973
-V.G
6=
29-08-1993
-Ex
1=
29-08-1999
-Ex
2=
29-08-2009
-Ex
9=
29-08-2016
-Nor
4=
29-08-2034
-Nor
3=
29-08-2050
-Good
8=
5-03-2057
-V.G

தடம் (Tracking)
தலைப்பிலேயே அதன் முக்கியத்துவம் புரிந்திருக்கும். தண்டவாளங்கள் ஒரே இடைவெளியில் ஒரே நீளமுடையதாகவும், ஒரே அளவுடையதாகவும் பிரயாணம் செய்யத்தக்க சக்கரத்தின் அமைப்பை ஒத்தும் அமையவேண்டும். ஒருவருடைய பெயருக்கும் இனிசியலுக்கும் எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவிற்கு தண்டவாளத்திற்கும் முக்கியத்துவம் உண்டு. ஒருவருடைய பெயரின் கிரகமும், இனிசியலின் கிரகமும் பிறந்த தேதியோடு ஒத்து இருக்கவேண்டும். தடம் எப்படி அமைந்துள்ளது என்பது மிகுந்த ஆராய்ச்சியாளர்களால் மட்டுமே அறியமுடியும். ஒரே சீராக தடம் அமையப் பெற்றிருந்தால் சிறப்பான செயல்பாட்டை பெறமுடியும். ஒருவருடைய எண்ணம், செயல்பாடும் சுலபமாக ஒரே நேர்கோட்டில் அமையப் பெரும். இல்லாத பட்சத்தில் நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் அமைந்து விடும். நினைப்பது நடப்பதற்கும் தடம் மிகமிக முக்கியம்.
தடத்தில் ஒரு தடம் ஒரு கிரகம் என்றால் அதற்கு இணையான தடம் அமையப்பெற்று இந்த இணைந்த குழு தடங்களும் பிறந்த தேதியோடு ஒப்புமையாக அமையப் பெற்றால் மிக உன்னதமாக பலனை எதிர்பார்க்கலாம்.
தடத்தின் தன்மையை பொருத்தேப் பிரயாணம் எப்படிப்பட்டதாக அமையும் என்பது தெரியவரும்.
உதாரணம் :
S.K  S A N K A R
3.2  3 1 5 2 1 2
5 + 14 = 19
5 + 5
S.K சங்கரின் பெயரில் தடம் ஒன்று ஆகவும் தடம் இரண்டும் ஆக அமையப்பெற்றுள்ளது. மிக சிறப்பான தடமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் சிறப்பாக அமைந்துள்ளதா என அறிய அவருடைய பிறந்த தேதியை கொண்டு அறிய முடியும். இந்த தடம் 6-ஆம் தேதி பிறந்துள்ளவருக்கு 6, 7, 8, தேதிகளில் பிறந்தவர்களும் ஒத்து வருவது, வராதது. இவ்வாறு தடம் பிறந்த தேதியை பொறுத்தே சிறப்பாக அமைக்கப்படவேண்டும்.
இந்த நிலை மாறும் பொழுது அவனை தடம் புரண்டான் என்றுதான் கூறவேண்டும். தடம் புரளுதல் வாழ்க்கையில் தனது இலக்கை அடைய முடியாது என்பது பொருள். பல இன்னல்களுக்கு ஆளாக வேண்டிவரும். தடம் அமைக்கும் பொழுது பிறந்த தேதிக்கும் பொருத்தமாகவும், பெயரின் இனிசியல் எழுத்துக்கு அடுத்த எழுத்து கணக்கில் எடுத்துக் கொண்டும் பெயரின் எண் சரியாக அமைத்து அந்த பெயரின் எண்ணும் பிறந்த தேதியோடு ஒப்புடையதாக அமையப் பெற்று தடம் அமைக்கவேண்டும். அவ்வாறு அமைக்கும் தடம் எவ்வளவு தூரம் சரியாக அமையப்பெறும் என்பதையும் மனதில் நிறுத்தி அதற்குத் தக்க வலிமையான எண் மதிப்பை அமைத்துத் தடம் அமைக்கவேண்டும்.

NAME ANALYSING (பெயர் ஆய்வு)

ஒரு பெயருக்கு மிகவும் முக்கியமானது பெயர் ஆய்வு என்பதாகும். இது மாலை தொடுப்பது போன்றது ஆகும். ஆரம்பம் எது முடிவு எது என்பதை குறிக்கும் ஒரு நிலை. ஆரம்பத்தில் இந்த எழுத்து அமையப்பெறுவது முடிவில் இந்த எழுத்து அமையப்பெறுவது என்றளவில் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொருவருடைய பிறந்த தேதியை பொருத்து ஆரம்ப எழுத்து முடிவு எழுத்து மாறுபடும். ஒரே மாதிரியாக அமையப் பெறுவது கடினம்.
ஒருவருடைய வாழ்க்கையின் செயல்பாடுகளில் ஆரம்பம் எத்தகையது முடிவு எத்தகையது  என்பது இதன் அடிப்படியிலேயே கூற முடியும். உதாரணமாக ஒரு மாணவர் கல்லூரியில் சேர விரும்புகிறார். ஒரு பொருளை உற்பத்தி செய்கிறார் என்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை பெறுவர். எப்படி எனில் ஒருவர் ஆரம்பித்து விடுவார் முடிக்க திணறுவார். ஒருவருக்கு ஆரம்பிக்க மிகவும் சிரமப்படுவார் பிறகு வேகமாக செய்து முடிப்பார். ஒருவரால் ஆரம்பிப்பதிலேயே குழப்பம் ஏற்பட்டு முடிவு வரை குழப்பமாக செய்வார்.
இவ்வாறு ஆரம்பம், முடிவு என்ற இரு செயலும் பெயரை பொருத்தே அமைகிறது.
5-ஆம் தேதி பிறந்த ஒருவருக்கு எழுத்து C, G, L, S-யில் அமையப்பெற்றால் 
 
எந்த காரியம் ஆரம்பிக்கும் பொழுதும் தடைகள் ஏற்படும்.
5-ல் B, K, R-யில் அமையப்பெற்றல் 
 
வெளிநாட்டுத் தொடர்புகள் ஏற்படும், இல்லற வாழ்க்கைக்கு உகந்தது கிடையது. 
5-ல் M, T, D-யில் அமையப்பெற்றல் 
ஆரம்பம் போராட்டமாக அமையும். மனதில் ஏதாவது ஒருகுறையோடு இருப்பார்.
5-ல் பிறந்து A, I, J, Q, Y-யில் பெயர் அமைந்தால்
செல்வசெழிப்பு ஏற்படும். கையில் பணம் புலங்கிக் கொண்டே இருக்கும்.
5-ல் பிறந்து U, V, W-யில் பெயர் அமைந்தால்
செய்யும் தொழிலில் தன்னைத் தியாகம் செய்து கொள்வார். நண்பர்கள் உறவினர்களுக்காக தியாகம் செய்து கொள்வார்கள்.
5-ல் பிறந்து E, H, N-ல் பெயர் அமையப்பெற்றல்
செய்யும் செயலில் ஈடுபாடு முதன்மைப்படுத்தும் தன்மை வசீகரம் கிடைக்கும்.
இவ்வாறு ஒவ்வொரு தேதிக்கும் பெயரின் ஆரம்ப எழுத்திற்கும் முடிவு எழுத்திற்கும் உள்ள தொடர்பு செயல்களில் ஆரம்பமும், முடிவை கூறும் வகையில் அமைந்துவிடும்.
இதுபோன்று ஆரம்ப எழுத்து, ஒருவருடைய வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இந்த எழுத்து அமைந்தவிதத்தை பொருத்து அமையப்பெறும். ஆரம்பம் மிக முக்கியம். முடிவு மிக முக்கியம். இதை விலியுறுத்தவே இந்த பெயர் ஆய்வு ஏற்பட்டது. ஆக்கும் கணக்குகளை அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிறது. பிறந்த தேதியின் தன்மையும் ஆரம்ப எழுத்து, முடிவு எழுத்துக்கும் இடைப்பட்ட கணக்கு அவரின் அடித்தளமாக அமைந்து செயல்படும்.

Word Combination (எழுத்துக் கோர்வை)

எழுத்துக் கோர்வை என்பது மாலையை கட்டுவது போன்றதாகும். அதை அழகாகவும் நயமாக கட்டுவது போன்றது. ஒரு பெயருக்கு மிக முக்கியமான பங்கு ஒருவருடைய தொழிலாகும். அந்த தொழிலில் அவரது உழைப்பு எத்தகைய தன்மையை உடையது என்பதை அறிய இந்த எழுத்துக்கோர்வை பயன்படும்.
ஒவ்வொருவரும் சம்பாதிக்க வேண்டும் என்றே உழைக்கிறோம். ஆனால் ஒருவர் நன்றாக சம்பாதிக்கிறார். ஒருவர் மிகவும் சிரமப்படுகிறார். பொருளாதார சூழலை பொருத்தே பெற்றுள்ளார் என்பது உலக வழக்கமாக அமைகிறது. திறமையை வெளிப்படுத்தி பணம் சம்பாதிக்கும் ஒருவரையே இவ்வுலகம் பாராட்டுகிறது. பட்டங்களையும் பதவிகளையும் தருகிறது. இத்தகைய ஒரு ஆராய்ச்சி எண் கணித ஆராய்ச்சிக்கு கிட்டிய மிக பெரிய வரப்பிரசாதம் எனலாம். மிக உன்னதமான நிலைக்கு சர்வ சாதாரணமாக இந்த கணக்கு மூலம் பொருளாதார முன்னேற்றத்தை மிக எளிதாக தர இயலும் என்பதை ஐயம்பட கூறமுடியும்.
இந்த கோர்வை சிறப்பாக அமையப் பெற்றால் ஒருவருடைய உழைப்பு வீண்போகாது.  உழைப்பது ஒட்டும். ஆக ஒருவருடைய முன்னேற்றம் பொருளாதார அளவில் அமைவதற்கு இந்த கணக்கு மிக மிக அவசியமானதாக உள்ளது.
SARATHA`S

43359613

9685679

454242

99666

9633

696

66

MANGAL&MANGAL

568443456844

25387792538

7826572782

618239961

79153967

7168364

8752291

63721

9193

113

24

AJITHKUMAR

225978153

47576968

2334665

567132

24845

6339

963

69

Single earning Capacity

RAJINIKANTH

3226633699

548396969

93236666

3559333

815366

96893

6583

242

66

Double earning capacity
இது போன்று 6, 2 சம்பாதிக்கும் திறனைக் கொண்டு இருக்கும். பிற எண்கள் அவர்களுடைய பிறந்த தேதியை பொருத்து மாறுபடும்.
பொதுவாக இதில் குறிப்பிட்ட எண்களை அடிப்படையாக கொண்டு பெயர் அமைப்பது கூடாது. வானவியல் (Astronomy) மதிப்பை பொருத்து எழுத்துக் கோர்வை அமைக்கப்படும். எழுத்துக் கோர்வையில் உள்ள எண் வானவியல் எண் மதிப்போடு ஒரு பொருத்தம் இருந்தால் மட்டுமே மதிப்பு பொருத்தம் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். ஆக முதலில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது. வானவியல் மதிப்பு ஆகும். இதனை அடிப்படையாக கொண்டு எழுத்துக் கோர்வை மதிப்பு போடப்படும். எந்தக் காரணம் கொண்டும் நீங்களாக பெயரை திருத்தம் செய்து கொள்ளாதீர்கள். இது புத்தகம் படித்து சமையலே தெரியாதவர் சமையல் செய்வது போன்றதாகும்.
ஒரு பெயரை தொடர்ந்து அடிக்கடி திருத்தம் செய்து கொண்டு எழுதி வருவாரானல் அவருக்கு எப்பொழுதுமே நிலையான பெயர் அமைய வாய்ப்பு கிடையாது. அடிக்கடி மாற்றம் செய்வது கடுமையான வியாதிகளை ஏற்படுத்திவிடும். ஒரு எண்ணிற்கு உள்ள வியாதி எதுவோ அது உடனே தலைதூக்கும் நன்மை அனுபவிப்பதைவிட தீமை மிகுதியாக பெறுவீர்கள். ஆகவே தகுந்த ஆலோசனை பெற்றே பெயரை திருத்தம் செய்யவும்.

PRONOLOGY (ஒலியியல்)
ஒரு எழுத்தை உச்சரிக்கும் பொழுதும் ஏற்படும் அதிர்வலையே ஒலியியல் ஆகும். என்ற எழுத்து உச்சரிக்கும் பொழுது மனதிற்குள் செல்லும் செயலை அக அதிர்வலையை முன்னர் பார்த்தோம். ஒரு காந்தத்திற்கு இருதன்மை உண்டு. ஒன்று ஈர்க்கும் ஆற்றல். மற்றொன்று தள்ளும் ஆற்றல் என்பது போல் ஒரு சொல்லை உள் வாங்கும் பொழுது அதன் ஈர்க்கும் ஆற்றலாகவும், ஒரு அலை வெளியில் செல்லும் வேகத்தை தள்ளும் ஆற்றலாகவும் கணக்கிடப்படுகிறது. எழுத்தின் ஈர்க்கும் ஆற்றலை Astronomy Value அஸ்ட்ரானம் மதிப்பீட்டில் பார்த்தோம். இப்பொழுது தள்ளும் ஆற்றலை ஒலியியலில் காண்போம். எப்படி ஒவ்வொரு எழுத்துக்கும் உள்ள ஈர்க்கும் திறன் அளவுகோலை AIJQY =1 என கூறினோமோ.
அதே போல் தள்ளும் திறன் அளவுகோளுக்கு மதிப்பு உண்டு. அதையே,df
A, J, S
= 1
B, K, T
= 2
C, L, U
= 3
D, M, V
= 4
E, N, W
= 5
F, O, X
= 6
G, P, Y
= 7
H, Q, Z
= 8
I, R
= 9
இந்த மதிப்பைக் கொண்டே ஒலி அதிர்வு எண்ணை காணமுடியும்.
உதாரணம்,
S.R A G A V A N
1 9 1 7 1 4 1 5
1 + 28 = 29

S K. M A Y I L S A M Y
1 2  4 1 7 9 3 1 1 4 7
3 + 37 = 40

R A J I N I K A N T H
9 1 1 9 5 9 2 1 5 2 8 = 52
T A T A
2 1  2 1 = 6

B I R L A
2 9 9 3 1 = 24
இவ்வாறு அது அதற்குள்ள எழுத்திற்குரிய எண்களை பொருத்தி இதன் கூட்டு எண்ணும் சம்பாதிக்கும் திறனை உடையதாக அமைத்து கொள்வது மேலும் சிறப்பை தரும். பிறந்த தேதியோடு ஒத்து செயல்படவேண்டும்.

எழுத்தின் விகிதச்சாரம் (Percentage)
எழுத்தின் விகிதச்சாரத்தில் ஈர்ப்பு சக்தியின் அடிப்படையில் எழுத்திற்கு உள்ள விகிதச்சாரம் தான் நம் சக்திக்குரிய எழுத்தின் விகிதச்சாரம் என இருவகையாக அமையப்பெறும். Astronomy Sound Value, Pronology Sound Value என்பதாகும். ஒரு பெயரில் எத்தனை எழுத்துக்கள் பிரித்து உபயோகப்படுத்தியுள்ளோம். எப்படி பயன்படுத்துவது என்பது விகிதச்சாரம் பார்ப்பது. ஒரு சிலருக்கு சூரியனின் ஆதிக்கத்தை மிகைப்படுத்த வேண்டும் என்பதற்காக விகிதச்சாரம் பார்த்து மிகைப்படுத்த உதவும் கணக்கு.
இவ்வாறு இருவகையிலும் பார்த்துக் கணக்கிடும் பொழுது பெயருக்கு மேலும் ஆற்றல் பிரவாகம் எடுக்கும்.
உதாரணமாக M. JAYAPRAKASH என்ற பெயருக்கு எழுத்தின் விகிதச்சாரம் என்ன என பார்ப்போம்.
Astronomy Sound   
Pronology Sound
1   50%
1   50%
2   16.7%
2   8%
3   8.3
3   0%
4   8.3%
4   8%
5   8.3%
5   0%
6   0%
6   0%
7   0%
7   17%
8   8.3%
8   8%
9   0%
9   8%

இவ்வாறு மேற்கூறியபடி ஒருவருடைய பெயரில் எத்தகைய கிரகத்தின் வலிமை மிகுதியாக இருக்கவேண்டும் என்று ஆய்வு செய்து அதற்கு தக்கபடி கிரகங்களை விகிதச்சாரம் வாயிலாக பிரித்து கணக்கிடப்படுகிறது.

OCTOCLE (குடும்ப கணக்கு)

குடும்பம் ஒரு கோவில். கோவிலக திகழவேண்டும் என்றால் குடுபத்தில் எல்லோரும் நலமாக இருக்கவேண்டும். நலம் கெடுவதற்கு காரணம் ஒருவருடைய கிரகம் மற்றவர்களுடைய கிரகங்களோடு ஒப்புமையாகமல் அமைவதே ஆகும். இத்தகைய ஒப்புமை எங்கிருந்து வரும் என்றால் யாருக்கு பெயர் அமைக்கிறோமோ அவருடைய பெயர் மற்றவர்களுடைய பிறந்த தேதியோடு ஒத்து அமைந்திருக்கவேண்டும்.
அதாவது ஒருவருடைய பெயர் 19-ஆம் எண்ணில் அமைந்துள்ளது என்றால் அவருடைய பெற்றோர்கள், தம்பிகள், தங்கைகள் என குடும்பத்தாரில் மிக முக்கியமான நபர் அந்த வீட்டின் இளைய நபர் அது ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். கடைசி நபரின் பிறந்த தேதியோடு கூட்டவேண்டும். அவ்வாறு கூட்டிவரும் பெயர் 4,7,8 வரக்கூடாது. பெயர் 19 ஆனால் கடைசி தம்பி, குழந்தை 3-ஆம்  தேதி பிறந்திருந்தால்
19 + 3 = 22 = 4  வரும் பட்சத்தில் பெயரை திருத்திக் கொள்ள நிபுணரை அணுகவேண்டும். பெயர் 33 ஆக இருந்தால் வீட்டின் கடைசி நபர் பிறந்த தேதி 2 ஆக அமைந்தால் 33 எண் நபர் பெயரை திருத்திக் கொள்ளவேண்டும். இதற்கு தகுந்தவாறு பெயரை திருத்தி எழுதி வந்தால் கடைசி கிரகத்தோடு ஒப்புமை பெற்றுவிடும்.
எத்தனையோ குடும்பத்தினர் ஒருவரோடு ஒருவர் இணக்கமான சூழல் இல்லாமல் சிரமப்படுகின்றனர். வெளியே உள்ளவர்களோடு சுமூகமான உறவு இருக்கும். ஆனால் வீட்டில் உள்ளவர்களோடு சுமூகமான உறவு இல்லாமல் தவிப்பவர்கள் இந்த ஆக்டகல் கணக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம். இதை பயன்படுத்தி பயன் அடைந்தவர்கள் ஏராளம். எந்த ஒரு கணக்கும் பயன்பாட்டிற்கு வரும் பொழுதுதான் நன்மை தீமைகளை ஆராயமுடியும். இதைப்படிக்கும் வாசகர்களும் தனது பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொழுதுதான் இந்தக் கலையின் உன்னதம் தெரியவரும். இல்லாத பட்சத்தில் எண்கணித நிபுணர்கள் சக்கரை இனிக்கும் என்று கூறுவது போல இந்த காலை வாழ்க்கை கலை என கூறிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். எப்பொழுது சாப்பிட்டு பார்க்கிறோமோ அப்பொழுது தான் நமக்கு அதில் உள்ள சூட்சுமங்கள் தெரியவரும். இந்த கணக்குகளை கையில் எடுத்து காண்பிக்க முடியாது இந்த கணக்கை பயன்படுத்தி வாழ்க்கையில் அனுபவிக்கும் போதுதான் தெரியவரும்.

காந்தத்தத்துவம் : (Magneto Therophy)
இந்த காந்தத்தத்துவம் என்பது ஒருவருடைய கர்ம பலனின் வெளிப்பாடு என கூறுகிறோம். பிராரப்திய கர்மம் என்பது ஏற்கனவே கூறியபடி இன்று வரை ஒருவர் செய்த செயல்களின் விளைவுகளின் பதிவு பிராரப்திய பதிவு எனப்படும். சஞ்சித கர்மம் பதிவு என்பது நமது முன்னோர்கள் செய்த பாவ, புண்ணிய மூட்டைகளின் வெளிப்பாட்டால் ஏற்பட்ட பதிவு இந்த இருபதிவுகளும் இணைந்து ஆகாமிய கர்மப் பதிவு ஏற்படுகிறது.
1. பிராரப்திய கர்மப் பதிவு+சஞ்சித கர்மப் பதிவு = ஆகாமிய கர்மப் பதிவு
2.
சஞ்சித கர்மப் பதிவு + பிராரப்திய கர்மப் பதிவு = ஆகாமிய கர்மப் பதிவு = காந்தத்தத்துவ பதிவு
ஒருவர் வயது ஏறிய நிலையில் 20,25,50 என பல வயதுகளில் கணக்கிடும் பொழுது பிராரப்திய பதிவுகள் தெரியவரும் இங்கு பிராரப்திய பதிவு என்ன என்பதையும், சஞ்சித கர்மப் பதிவு என்ன என்பதையும் அறிந்து காந்தத்தத்துவ அடிப்படையில் ஆகாமிய கர்மத்தை நிர்ணயிக்கச் செய்யலாம். இது ஒரு விதம்.
ஒரு பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் பட்சத்தில் இவருக்கு எங்கிருந்து பிராரப்திய கர்மம் ஏற்படுகின்றது. இவருக்கு சஞ்சித கர்மப் பதிவை மட்டுமே வைத்து கொண்டு பெயர் அமைக்கும் பட்சத்தில் அந்த பெயரும் சஞ்சித கர்மமும் இணைந்து செயல்படும் பொழுது பிராரப்திய கர்மப் பதிவு என்னவாக இருக்கும் என கணக்கில் கொண்டு ஆகாமிய கர்ம பலனை அமைக்க முடியும்.
ஆக காந்தத் தத்துவத்தின் அடிப்படையில் ஒருவருடைய விதியை மாற்றியமைப்பது எளியது. நல்ல செயலை ஊக்கப்படுத்துவது மூலம் நல்ல எண்ணங்களும், நல்ல சொற்களும், நல்ல செயல்களும் ஏற்படுகின்றது.
இந்த காந்தத்தத்துவம் அடிப்படையில் ஒருவருடைய கையில் உள்ள நவக்கிரகங்களின் செயல்பாட்டை நாளமில்லா சுரப்பிகளின் வாயிலாக தாக்கத்தை கிரகங்களின் வாயிலாக மூன்று பிரிவாக பிரித்து கணக்கிடப்படுகிறது.
1. நன்மை = (Positive) = Clockwise
2.
தீமை (Negative) = Anti Clockwise
3.
நன்மை- தீமை இல்லாமல் (Neutral) = Straight

இவ்வாறு காந்தத் தத்துவ அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதனை ஸ்கேன் என்றும் கூறப்படுகிறது.
நம் உள்ளங்கையில் 9 கிரகங்களின் தாக்கம் 8 நாளமில்லா சுரப்பிகளின் தாக்கமும் தெரியவரும்.
 1
 2
 5
 6
 7
 9


 1
 5
 6
 7
 9
-50%

 1
 5
 6
 9
- 60%

 1
 5
 9
-70%

 5
 9
-90%

 5
-100%




இந்த அடிப்படையில் ஸ்கேன் செய்து பார்த்த பிறகு மேலும், அதிகபட்ச நன்மை தரும் கிரகம் எது என கண்டறிய மேலே உள்ளபடி பில்டர் (Filter) செய்யும் பொழுது ஆய்வு செய்யும். நபருக்கு புதன் (அ) கரியன் சுக்கிரன், சந்திரன், குரு, ராகு, கேது, சனி, செவ்வாய் என 100% நன்மை தரும் கிரகத்தை கண்டறியப்படும்.
மேலும் புதன் என்று வரும் பொழுது எதில் பெயர் அமைப்பது  14, 23, 32, 4250, 59, 68, 77, 86 என பார்க்கும் பொழுது மீண்டும் ஸ்கேன் மூலம் பில்டர் (Filter) செய்யப்படும்.
உதாரணமாக :
14
23
32
41
50
59


23
32
41
59
-50%

 23
41
59
-60%

 41
59
-90%

41
-100%



இவ்வாறு அவருக்கு 41 எண்ணில் பெயர் வைக்கலாம் என தீர்மானம் செய்யப்படுகிறது. இவ்வாறு காந்தத் தத்துவம் அடிப்படையில் ஒருவருக்கு எத்தகைய எண்ணில் பெயர் அமைத்தால் சஞ்சித கர்மப் பதிவையும், பிராரப்திய கர்மப் பதிவையும் சமன் செய்து ஆகாமிய கர்மப் பதிவு எத்தகையதாக நன்மையுடையதாக ஆகும் ஒரு அற்புத கலையை அறிந்து கொள்ள உதவுகிறது. இதன் அடிப்படையில் காந்தத் தத்துவத்தை பயன்படுத்தி பல்லாயிரம் நபர்கள் பயனடைந்துள்ளனர். இந்த காந்தத்தத்துவக் கலையை தெய்வீக கலை என்றும் கூறுவர்.





1 comment:

  1. contact:akshayadharmar-9842457516
    NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS
    ARULNIDHI AKSHAYADHARMAR,B.SC.,M.A.,M.PHIL.,DNYT
    SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112.
    CELL:9842457516, 8524926156,0431-2670755
    EMAIL: akshayadharmar@gmail.com
    WEB: www.akshayadharmar.blogspot.in

    ReplyDelete