பெயர் ஒரு வகைத் தவம்
பெயர் ஒருவனுக்கு தவத்தை போன்றதாகும். பெயரை எண்கணித
ஆராய்ச்சியில் அமைத்தபிறகு காலையில் சூரியோதயத்திற்கு முன் ஒரு மாதம் தினசரி
எழுதச் செய்யவும். அவ்வாறு விழித்த பின் எழுதுவது என்பது நம் உடல், மனம், உயிர், அறிவு சலனமற்று ஒரு
நிலையொடு இருக்கும், அப்பொழுது
குறிப்பிட்ட முறை எழுதி முன் கூறியபடி ஏற்கனவே பெயர் பதிவாகி உள்ள நாள்கள் 15 வருடமாகவவோ, 60 வருடமாகவோ கூட
இருக்கலாம். அவ்வளவு நாட்கள் பதிந்த பதிவுகளுக்கு மேல் பதிவு கொடுக்கும்போது நம்
அறிவு, மனம், உடல், உயிர், அனைத்தும் ஒரு
நிலைப்படுத்தப்பட்ட நிலையில் நிலையாக இருக்கவேண்டும். இத்தகைய ஒரு
நிலைப்படுத்தப்பட்ட நிலையில் நாம் நம் பெயரை தொடர்ந்து எழுத ஆரம்பிக்கும்போது
மாற்றப்பட்ட, திருத்தப்பட்ட, பெயரின் வலிமை கூடுகிறது.
பதிவுகள் ஆழ்ந்து பதிகிறது.
இந்த நிலையில் புதிதாக உள்ள பெயரின் முழு பலனையும்
அனுபவிக்க தயார் ஆகிறோம். ஒருமாதத்தோடு முடித்துவிடாது தினசரி தொடர்ந்து எழுத
வேண்டும் இதன் மூலம் ஏற்கனவே என்ன விதமான குறைபாடுகள் இருந்ததோ அது பிறகு
விளக்கப்பட்டு தற்காப்பு ஏற்பட்டு, புது வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.
பெயரே நம்மை இயக்கக்கூடிய சக்தி, பெயரே நம் வாழ்க்கையின்
உயர்நிலைக்கு அழைத்துச்செல்லக்கூடிய சக்தியாகும். நம் பெயர் இப்பிரபஞ்சம்
முழுவதும் தொடர்பு வைத்து கொண்டு உள்ளது.
இத்தகைய வலிமை வாய்ந்த பெயரை அலட்சியப்டுத்தியது தான் இது
நாள் வரை ஏற்பட்ட துன்பங்களுக்கு எல்லாம் காரணம். இனியும் அலட்சியப்படுத்தாமல் நம்
பெயரை பிறந்த தேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என ஐந்தின்
அடிப்படையில் அமைத்துக்கொண்டு வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிலைக்க
செய்வோம்.
பெயர், ஜீவ காந்தம், வான் காந்தம், பஞ்சபூதங்கள், நவக்கிரகங்கள் என
பிரபஞ்சம் முழுவதையும் தொடர்புபடுத்தும் ஒரு அற்புதத்தன்மையை பெற்று இருக்கிறது.
அத்தகைய பெயரைக் கொண்டு வாழ்வில் விஞ்ஞான, மெய்ஞ்ஞான நுணுக்கங்களை
கற்று அறிந்து ஆராய்ச்சி செய்யும் கலையாக எண் கணிதம் கிடைத்துள்ளது. இந்த கலை உடல், மனம், உயிர் ஆகியவற்றிற்கு
கிடைத்திருக்கும் அற்புத வாய்ப்பு, அறிவிற்கு கிடைத்திருக்கும் ஒரு
அற்புத விருந்து. இப்பிரபஞ்ச ரகசியங்களோடு ஒப்பிடும் போது இந்த அறிவிற்கு
கிடைத்திருப்பது ஒரு அணுவின் வெளிப்பாடு எனலாம்.
ஒரு அணுவின் அளவை ஞானிகள் ஒரு பசுவின் ரோமத்தை எடுத்து அதை
இலட்சமடங்கு துண்டு செய்து, அதில்
ஒன்றை எடுத்து அதை இலட்சமடங்கு துண்டு செய்தால் எவ்வளவு கிடைக்குமோ அந்த அளவே
அணுவாகும் என்றனர். இதை நாம் அகக்கண்ணால் மட்டுமே உணர முடியும். அத்தகைய ஒரு
அணுவின் வெளிப்பாடே இந்த ஆராய்ச்சியின் வெளிப்பாடு ஆகும்.
நோய்களுக்கும் பெயரே காரணம்
இதற்கு முன் பெயர் நமது வாழ்க்கையின் பொருளாதார தடைகளையும், எதிர்பாராத விபத்தினால் மரணம் ஏற்படுவதற்கும் காரணமாக
உள்ளது என அறிந்தோம். இனி நோயிற்கும் பெயரே காரணமாக உள்ளது என்பதை
கண்டுபிடித்துள்ளோம். இதைபற்றிய நூல் தெளிவாக பின் வெளிவரும்.
அதாவது சக்கரை, ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இருதய நோய், மூலம், காக்கை வலிப்பு
இன்னும் பல நோய்களுக்கு பெயரே காரணமாக உள்ளது. இத்தகைய பெயரினால் ஏற்படும் நோயை
பெயரைக்கொண்டு சரிசெய்தால்தான் சரியாகும். முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும்
என்ற பழமொழிபடி எதிலிருந்து உருவாகிறது என்பதை அறிந்து ஆராய்ந்து வேரோடு பிடுங்கி
எறிந்தால் இனி வளருமா? இத்தகைய வேரினை கண்டுபிடித்தாக்கிவிட்டது. வளருமா? இனி அகற்றுவதற்கான வழியையும் கண்டு பிடித்தாகிவிட்டது.
மருந்தின்றி, பத்தியமின்றி, வருத்தமின்றி, உறுத்தலின்றி பெயரை
திருத்தியோ, மாற்றியோ அமைப்பதன் மூலமே குணப்படுத்தப்படுகிறது.
இதற்கு நேமியோபதி சிகிச்சை (NAMEOPATHI) என்று பெயர். இந்த
சிகிச்சை உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்தக்கூடியது. இந்த
சிகிச்சைக்கு தேவை உங்களுடைய பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், கிழமை மட்டுமே.
இதனை பிறந்த தேதி, விதிஎண், கிழமை, மாதம் பஞ்சபூதம் என்ற அடிப்படையில் பார்த்து எந்த நாளமில்லா
சுரப்பி இயக்கம் பதிக்கப்பட்டுள்ளது என்பதை பெயரினை கொண்டு ஆராய்ச்சி செய்து அந்த
நாளமில்லா சுரப்பியை இயக்கும் மாற்றுப் பெயரை பயன்படுத்தி சரி செய்யும்
சிகிச்சைக்கு நேமியோபதி சிகிச்சை என்று பெயர்.
இதன் பயனை திருச்சியிலும், திருச்சியை
சுற்றியுள்ள நகரங்களிலும் பொதுமக்கள் நல்ல உற்சாகத்தோடு, நல்ல ஒத்துழைப்பை கொடுத்து பயன்பெற்று வருகிறார்கள்.
முதுகுவலி (BACKPAIN) மருத்துவர்களின்
ஆலோசனைகளால் ஏராளமான செலவுகள் செய்து சரி செய்ய முடியாத வியாதியும், நேமியோபதி சிகிச்சை மூலம் சரியாகிவிட்டது. பல வருடமாகியும் குழந்தையில்லாமல் மனவேதனையோடு உள்ள அந்த
தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட்டது.
அந்தளவிற்கு பெயரே நம் வாழ்க்கை சூழ்நிலையை நிர்ணயிக்கக்
கூடியதாக உள்ளது. கருக்கலைப்பு பெயரினாலேயே ஏற்படுகின்றது. கருவுற்றிருக்கும்
தாய்க்கு பெயர் எண், 26, 35 ஆக இருந்தாலும்
இனிசியல் P,F இருந்தாலும் அபார்ஷனால் முதல் குழந்தையை பாதிக்கிறது.
இதை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்தால் தெரியவரும்.
அதாவது பிரபாகரன் என்பவருடைய மனைவிக்கு இன்சியல் P ஆகும். இத்தகைய P அவருடைய முதல் குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக முடிகிறது.
அதாவது கருவிலேயே கருக்கலைப்பு ஏற்படுகிறது அல்லது பிறந்து இறந்து விடுகிறது. இதுபோல் எண்ணிலடங்கா செயல்பாடுகளுக்கு பெயரே காரணமாக
உள்ளது.
நோய்களுக்கு பெயரே காரணமாக உள்ளது என்பதை அறிய உதாரணமாக
இன்சியல் "R" ஆக இருந்தால் 90% சர்க்கரை வியாதி ஏற்படுகிறது.
இன்சியல் "B" ஆக இருந்தால் பிரம்மை பிடிக்க காரணமாக உள்ளது "K" ஆக இருந்தால் சிறுநீரக சம்பந்தமான வியாதிகள்
ஏற்படுகிறது. ஆனால் அதிகபட்ச பெயரோ, இன்சியலோ, மொத்த எண்ணோ "2" ஆகிய சந்திரனின்
ஆதிக்கத்தில் இருந்தால் சர்க்கரை வியாதி உள்ளது. இதை உங்கள் அருகில் உள்ள சர்க்கரை
வியாதி நோயாளியின் பெயரை எழுதி முன் கூறியபடி எண்ணை போட்டு கூட்டி பார்க்கலாம்.
ஏதாவது ஒன்று 2-ன் தன்மையோடு அமைந்திருக்கும். அதாவது,
R. SANKAR
2+ 315212
2+ 14 = 16
2+ 315212
2+ 14 = 16
இன்சியலில் 2 ஆக அமைந்துள்ளதால்
சர்க்கரை வியாதி ஏற்படும்.
இதேபோல்,
இதேபோல்,
S. MANI
3+ 4151
3+ 2 = 14
3+ 2 = 5
3+ 4151
3+ 2 = 14
3+ 2 = 5
பெயரில் 2 எண் அமைந்துள்ளது.
இதேபோல்,
இதேபோல்,
T. RAJAMANI
4. 21114151
4+ 16 = 20
4. 21114151
4+ 16 = 20
மொத்த எண் 2 எண்ணாக
அமைந்துள்ளது.
இதேபோல் பெயர் எண்ணிலோ, இனிசியலிலோ, மொத்த எண்ணிலோ 2 எண் வருமானால்
சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. இதை நேமியோபதி சிகிச்சை மூலம் பிறந்த தேதியையும், பெயரையும், பிறந்த தேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற
ஐந்தின் அடிப்படையில் பார்த்து பெயரை திருத்தியோ, மாற்றியோ அமைப்பதன்
மூலம் சரி செய்யமுடியும்.
இதேபோல் முன் கூறிய இரத்த அழுத்தம், மூலம், இருதய நோய், ஆஸ்துமா, தோல்நோய், காக்கை வலிப்பு, சர்க்கரை, போன்ற நோய்களுக்கு பெயரே காரணமாக உள்ளது. இந்த நோய்களை
பிறந்த தேதி, விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம் இவற்றின்
அடிப்படியில் பெயரை அமைத்து நாளமில்லா சுரப்பியை இயங்கச் செய்து நேமியோபதி
சிகிச்சை மூலம் சரி செய்யலாம். மேலும் மேலும் தொடர்ந்து பல ஆராய்ச்சி நடைபெற்றுக்
கொண்டு இருக்கின்றன.
நோய்கள் பற்றிய நூல் பின் விரிவாக வெளிவரும். உங்களது பெயரை
அனுபவம் வாய்ந்த எண் கணித நிபுணரை கொண்டு சரி செய்து கொள்ளுங்கள். ஏனையோர்
புத்தகங்களை படித்து எல்லாம் தெரிந்து விட்டதாக கருதி பெயரை திருத்தம் செய்து துன்பப்படுவார்கள்.
அதைத் தவிர்க்கவும். நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்ய பணத்தை பார்க்காமல் திறமையான
எண் கணித நிபுணரை பார்த்து ஒளி மயமான எதிர் காலத்தை பெறுங்கள்.
வானவியல் ASTRONOMY
வானவியல் என்பது கிரகங்களின் சஞ்சாரங்களின் செயல்பாட்டை
மையமாக கொண்டது. கிரகங்களும் நமக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதைதான் நம்
அறிஞர்கள், ஞானிகள்,
"அண்டத்தில்
பிண்டம்", "பிண்டத்தில் அண்டம்" என்று கூறுவர். இந்த அண்டமே
உடலாகவும், உடலே
அண்டமாகவும் அமைந்துள்ளது.
வானவியல் என்னும் வான சாஸ்திரம் என்னும் ஒரு பகுதி வான
சாஸ்திரம் என்றும் மற்றொரு பகுதி பஞ்சபூதமாகவும் அமைந்துள்ளது. பஞ்சபூதங்களால்
ஆனது உடல். இந்த பஞ்சபூதங்களை இயக்கும் ஆற்றல் நவக்கிரகளுக்கு உண்டு.
பஞ்சபூதமின்றி நவக்கிரகங்கள் இல்லை.
நவக்கிரகங்கள் இன்றி பஞ்சபூதங்கள் இல்லை.
எங்கும்
வியாபித்திருக்கும் இந்த களம் இரண்டு பிரிவாக அமைந்துள்ளது.
1. சிவ
களம்
2. சக்தி களம்
2. சக்தி களம்
சிவகளத்திலிருந்து தான்
சக்தி களம் தோன்றியது. சக்தி களம் இல்லாமல் சிவகளத்தை உணர முடியாது. இதையே தான்
"சக்தி இல்லையேல் சிவமில்லை, சிவமில்லையேல் சக்தியில்லை"
என்பர். சிவனுக்குள் சக்தி அடக்கம்.
சிவகளம் என்பது சுத்தவெளி, இயக்கமற்ற நிலை, சக்தி களம் என்பது
இயங்கும் நிலையில் உள்ள கிரகங்கள், கிரகங்களின் செயல்பாடுகளின்
தொகுப்பு பூமி. பூமியில் உள்ள உயிர்கள் அனைத்தும் சக்தி களத்தில் அடங்கும். இந்த
சக்தி களத்தினை மையமாக வைத்து தான் வான சாஸ்திரம் உருவானது. இது ஒரு கருவிலே
திருவுடைய ஒருவரால் மட்டுமே சாஸ்திரம் தோன்றியிருக்கும் என்று கூறுகிறோம். பொதுவாக
சாஸ்திரம் என்பதே இந்த சமூகத்தை வழி நடத்தும் ஒரு களமே அமையப் பெற்றுள்ளது. ஒருவர்
பெற்ற இன்பத்தை பிறர் அனுபவிக்க ஆராய்ச்சி செய்து மிக துல்லியமான நுணுக்கமான
அரூபமான கருத்துக்களை கொண்டுள்ளது. இதுபோன்ற வானசாஸ்திர ஆராய்ச்சிகளுக்கு அளவுகோல்
என்பது தன்னிலையைச் சார்ந்தது. ஆராய்ச்சி செய்யும் நபர் எத்தகைய தனித்தன்மையோடு
அவ்வளவுவிதமான கற்றறிந்த செயல்பாடுகளின் தன்மையை பொருத்தது. அவருடைய தரத்தையும்
குணத்தையும் சார்ந்து இருக்கும். இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு திடமான விதிகளோ மாறாத
சட்டதிட்டங்களோ கிடையது. உணர்ச்சி சார்ந்தது என்றால் இத்தகைய உணர்ச்சியின்
வெளிபடுகளாக இருந்தாலும் 50% அறிவு
சார்ந்தும் அமையும் பெளதீக ஆராய்ச்சியில் 100% அறிவு சார்ந்து அமையும்.
அதனால் தான் பெளதீக ஆய்வாளர்களால் வானசாஸ்திர ஆய்வுகளை ஏற்றுக் கொள்ளமுடியாது.
அவர்களின் ஆய்வுகளும் வேறு. இலக்கியத்தின் ஆய்வுகளும் வேறு. மிகத் துல்லியமான
ஆய்வு களத்தில் (பெளதீக) வானசாஸ்திர ஆராய்ச்சிகள் செய்ய முயன்றாலும் துல்லியமாகக்
கூற இயலாத நிலையே அமைந்துள்ளது. வான சாஸ்திரத்தை உணர, அனுபவிக்க உணர்ச்சி
பூர்வமான செயல்பாடும், அறிவு
சார்ந்த செயல்பாடும் அவசியம்.
50% உணர்ச்சியும் 50% அறிவும் தேவை. இது எனது
அனுபவபூர்வமான உண்மை. அறிவியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. ஏற்றுக்
கொள்ளாமல் இருக்கவும் முடியாது. நான் டிவி-யில் (விஐய்) பேசிய தலைப்பு. அன்று
வியாதியை பற்றியது. இனிசியலில் R மட்டும் வருமானால் பெயரில் ஆரம்ப
எழுத்து R ஆக
வரும் நபர்களுக்கு 90%
சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. அதே போல் அனேக வியாதிகளை பற்றியும் பேசி இருந்தேன்.
அந்த நிகழ்ச்சிகளையும் பற்றியும் பேசி இருந்தேன். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு
வாரம் கழித்து ஸ்ரீ ஹரி கோட்டாவிலிருந்து ஒரு அறிவியல் அறிஞர் (Scientist)
தொலைபேசி
மூலம் தொடர்பு கொண்டு எனது நிகழ்ச்சியை பார்த்ததாகவும் அவருக்கு இனிசியல் R வந்துள்ளதால் தனக்கு
சர்க்கரை வியாதி இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு பிறகு அவரது நண்பர்கள்
உறவினர்கள் என எல்லோருடைய பெயரையும் ஆய்வு செய்து பார்த்த பொழுது நீங்கள் கூறியபடி
சரியாக உள்ளது. என்னால் இதை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும்
முடியவில்லை என்று கூறுகிறார். இதை எதற்கு இங்கு கூறுகிறேன் என்றால் பெளதீக
ஆய்வில் இத்தகைய ஆய்வுக்கு 50%
மட்டுமே நம்பிக்கை இருக்கும், ஏனென்றால் இது இலக்கிய ஆய்வை மையமாக
கொண்டு செயல்படுகிறது.
இவ்வாறு
வானவியல் வான சாஸ்திரம் கூறிக்கொள்கிறார்கள்.
சிவகளமில்லாமல் சக்தி களத்தில் நவக்கிரகங்களுள்.
சிவகளமில்லாமல் சக்தி களத்தில் நவக்கிரகங்களுள்.
1. சூரியன்
2. புதன்
3. சுக்கிரன்
4. சந்திரன்
5. செவ்வாய்
6. குரு
7. சனி
8. ராகு
9. கேது
10. யுரேனஸ்
11. நெப்டியூன்
12. புளூட்டோ
சக்தி களதில் உள்ள
நவக்கிரகங்களுக்கும் நமக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
|
சூரியன்
|
- எழும்போடும்
|
|
புதன்
|
- தோல்களோடும்
|
|
சுக்கிரன்
|
- ஜீவ விந்து
குழம்போடும்
|
|
சந்திரன்
|
- ரத்தத்தோடும்
|
|
செவ்வாய்
|
- ரத்தத்தில்
உள்ள சிக்கப்பணுக்களோடும்
|
|
குரு
|
- மூளையோடும்
|
|
சனி
|
- நரம்புகளோடும்
|
|
ராகு,கேது
|
- மனதோடு
|
என நெருங்கிய தொடர்புகளை கொண்டது.
இந்த தொடர்பை நாளமில்லா சுரப்பிகள் ஏற்படுத்துகின்றன.
இந்த தொடர்பை நாளமில்லா சுரப்பிகள் ஏற்படுத்துகின்றன.
|
குரு
|
- Cerebral Cortex
|
- துரியம்
|
|
சூரியன்
|
- Convernous Plexy
|
- ஆக்கினா
|
|
புதன்
|
- Pineal Gland
|
- மனோன்மணீயம்
|
|
சந்திரன்
|
- Pharyngeal Plexy
|
- விசுக்தி
|
|
சுக்கிரன்
|
- Cordiac Plexy
|
- அனாகதம்
|
|
சூரியன்
|
- Solar Plexy
|
- மூலாதாரம்
|
|
சனி செவ்வாய்
|
- Coccygeal Plexy
|
- மணிபூரம்
|
|
ராகு, கேது
|
- Hypogaestric Plexy
|
- சுவாதிஸ்டோள
|
இவ்வாறு நாளமில்லா சுரப்பிகளுக்கும், உடலுக்கும் உள்ள
தொடர்பும் நாளமில்லா சுரப்பிகளுக்கும் இடையே உள்ள தொடர்பையும் நன்கு
உணர்ந்தவர்களால் மட்டுமே நோயைப் பற்றியும் நோயின் மூலத்தையும் கண்டறிய முடியும்.
இன்று அலோபதி மருத்துவ அறிஞர்கள் நாளமில்லா சுரப்பிகள் உள்ளது என ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அன்று அதைப்பற்றி துணித்துனரவோ மேலும் ஆய்வுகளையோ செய்யவில்லை. இதனால் தான் அலோபதி
மருத்துவத்தால் நோயை கட்டுப்படுத்த முடிக்கிறதே அன்றி குணப்படுத்த இயலவில்லை.
நாளமில்லா சுரப்பிகளை நம் முன்னோர்கள் ஞானிகளும் முனிவர்களும் தன் கையசைவினாலும்
நாளமில்லா சுரப்பிகளை தொடுவதாலும் வியாதியை குணப்படுத்தி மகிழ்வித்தனர்.
இவ்வாறு கிரகங்களுக்கும் நமக்கும் இடையே உள்ள தொடர்புகளை
அறிந்தோம். எத்தகைய மாற்றங்களைத் துன்பங்களை ஏற்படுத்துகிறது என்பது வான இயலின்
அடுத்தக் கட்டசிந்தனையாக எடுத்துக்கொள்வோம்.
ஏற்கனவே நான் கூறியபடி கிரகங்களும் சரி உடலும் ஒன்றுக்
கொன்று தொடர்பு இருக்கும் பட்சத்தில் ஒரே மாதிரியான சமூகம் இல்லையே. ஒவ்வொருவரும்
ஒவ்வொரு செயல்பாடுகளும், சிந்தனைகளும், உடல்வாகுகளும்
அமைந்துள்ளன. என்ன காரணம்? இதைத்தான்
வான இயலில், உடலியலுக்கும்
உள்ள தொடர்புகளின் விளைவுகள்.
உடலை பொருத்த வரை மூன்று பாகமாக பிரிக்கிறோம். ஒன்று ஸ்தூல
உடல், சூக்கும
உடல், காரண
உடல். அதாவது பரு உடல், உயிருடல், மன உடல் என்பன.
மன உடலை மூன்று பிரிவாக பிரிக்கலாம். 1. ஆழ்மனம், 2. அடிமனம், 3. மேல் மனம், என்பன. உயிருடல் நம் உடலை
சுற்றி ஒரு களம், மன
உடல் நம் உடலை சுற்றி மற்றொரு களம். இதைதான் இலக்கியவாதிகள் கண்ணுக்கு தெரிபவை
மட்டூம் உண்மையானது அல்ல. கண்ணுக்கு தெரியாத பல உண்மைகளும் உள்ளன என்பர். இதனால்
தான் இத்தகைய ஆய்வுகளை மதிப்பீடு என்பது சமூக மதிப்பீடு மட்டுமே
எடுத்துக்கொள்ளமுடியும்.
அறிவியல் மதிப்பீடாக கொண்டால் குழப்பமே மிஞ்சும். அறிவியல்
மேதைகளும் குழம்பிதான் ஆகவேண்டும். அறிவியல் பார்வையில் மனம் எங்கு உள்ளது என்று
கேட்டால் உயிர் எங்கு உள்ளது என்று கேட்டால் என்ன பதிலாக இருக்கும். மனம் நோகிறது
என்கிறோம். மனதில் பதியவை என்கிறோம். உயிர் உள்ளது என்கிறோம். இவ்வாறு உண்மையானதா? பொய்யானதா? என நமக்குள்ளும்
கேட்போம். அறிவியல் பார்வையாலும் வைப்போம்.
மனதையும், உயிரையும், பொருத்தவரை அறிவியல் ஆய்வுகளால் சான்றுகளை கொண்டு உறுதியான மாறாத ஆய்வு முடிவுகளை பெற முடியுமா?
மனதையும், உயிரையும், பொருத்தவரை அறிவியல் ஆய்வுகளால் சான்றுகளை கொண்டு உறுதியான மாறாத ஆய்வு முடிவுகளை பெற முடியுமா?
செய்முறை கூடங்களில் சான்றுகள் திரட்ட முடியுமா? உயிர் இத்தனை அளவு
உள்ளது. மனம் இத்தனை அளவு உள்ளது என கூற முடியுமா? ஏன் இதை கூறுகிறோமென்றால்
அறிவியல் செல்லும் பாதை வேறு? ஆன்மிகம் இலக்கியம் செல்லும் பாதை
வேறு. இரண்டும் இரண்டு தண்டவாளங்களை போன்றது. எந்த ஒன்று மட்டும் வளர்ந்தாலும்
சுகமாக பிரயாணம் செய்ய முடியாது.
அறிவியலும் தேவை. ஆன்மீகமும் தேவை. தேவை என்பது
உணர்பவர்களைப் பொருத்த விஷயம்.
இன்று வானவியல் என்ற ஒரு தொகுப்பை வழங்கிக்
கொண்டிருக்கின்றோம். இன்று சந்திர கிரகணம். சூரிய கிரகணம் நாட்கள் மாதங்களாய், பருவங்கள் அனைத்தும் நம்
முன்னோர்கள் மிக துல்லியமாக கணித்து வைத்துள்ளனர். இன்று அறிவியல் அறிஞர்களும்
அதைத்தான் பின்பற்றுகின்றனர். அன்று, தவறு என்று கூறி தூக்கி
எறியவில்லையே. இன்று தொலைநோக்கு கருவிகளையும், சேட்லைட் கருவிகளையும்
கொண்டு கிரங்களை பார்க்கிறோம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள், கிரகங்களையும் அதன் செயல்பாடுகளையும்
மிக துல்லியமாக கூறி வைத்திருக்கின்றனரே சிந்திப்போம்.
இவ்வாறு கிரகங்களின் தாக்கமும், பஞ்சபூதங்களின் தாக்கமும்
இம்மண்ணுலகில் மக்களை பலவாறு ஆட்டிப்படைக்கின்றது. இதையே வானவியல் ஆய்வுகளை
நிகழ்த்தும். அறிஞர் பெருமக்கள் மிகவும் அடக்கமாக செயல்படுகிறார்கள். பிரபஞ்சத்தை
நாம் இயக்குகின்றோமா? பிரபஞ்சம்
நம்மை இயக்குகின்றதா? என்ற
கேள்விகள் பலவாறு எழுந்து அறிஞர்களையும், ஞானிகளையும் மனதில்
குழப்பி கொண்டுதான் உள்ளனர்.
இயற்கையோடு நாம் ஒன்றிதான் வாழக் கற்கிறோம். அதையே தான்
எண் கணிதமும் கூறுகிறது. இயற்கைக்கு புறம்பான இயற்கைக்கு புறம்பாக வாழ எந்த
சாஸ்திரமும் தோன்றவில்லை. எண் கணிதத்தில் ஒரு எழுத்தை நாம் உபயோகிக்கும் முறையில்
கூறும் பொழுது அந்த எழுத்து உள்முகமாக ஒரு அதிர்வலையையும், வெளி அதிர்வலையையும்
அதாவது அக அதிர்வலை, புற
அதிர்வலை என கூறலாம். இத்தகைய அதிர்வலைகளை 8 நாளமில்லா சுரப்பிகளை
கொண்டு அக அதிர்வலைகளை கணக்கிட்டும் புற அதிர்வாலையை 9 கிரகங்களும்
தொடர்புபடுத்தி கூறுகின்றனர்.
இதில் அக அதிர்வாலையை நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படுத்தும்
எழுத்துக்களை வான சாஸ்திர மதிப்பாக கொள்ளப்படும்.
ASTRONOMY
VALUE
|
A, I,
Q,Y.
|
- 1
|
|
B, K, R.
|
- 2
|
|
C, G, L, S.
|
- 3
|
|
D, M, T.
|
- 4
|
|
E, H, N, X.
|
- 5
|
|
U, V, W.
|
- 6
|
|
O, Z,
|
- 7
|
|
F, P,
|
- 8
|
இவ்வாறு எட்டு பிரிவுகளாக பிரித்து கணக்கிடப்படுகிறது.
இதை ஒவ்வொருவருடைய பெயரில் எத்தனை அதிர்வாலையை
ஏற்படுத்துகிறது என்றால் 3 பிரிவுகளாக பிரித்து செயல்படுகிறது. முறையே இனிசியலில், பெயரில், மொத்த
எண்ணில் இத்தகைய தாக்கம் தெரியவரும்.
C. S A N K A R
3. 3 1 5 2 1 2
3 + 14 = 17
3. 3 1 5 2 1 2
3 + 14 = 17
இனிசியல் 3 குருவின் ஆதிக்கம்
பெயரில் 14 = 5 புதனின் ஆதிக்கம்
மொத்த எண்ணில் = 17 = 8 சனியின் ஆதிக்கம்
இத்தகைய 3 ஆதிக்கங்களும் ஒருவருடைய பிறந்த தேதியில் உள்ள 4 கிரகங்களோடு அமையவேண்டும்.
பெயரில் 14 = 5 புதனின் ஆதிக்கம்
மொத்த எண்ணில் = 17 = 8 சனியின் ஆதிக்கம்
இத்தகைய 3 ஆதிக்கங்களும் ஒருவருடைய பிறந்த தேதியில் உள்ள 4 கிரகங்களோடு அமையவேண்டும்.
பிறந்த தேதியில் 4 கிரகங்களை நாம் எவ்வாறு
காண முடியும் என்றால்
ஒருவருடைய பிறந்த தேதி
என்பது இறைவனும் நம்மாலும் (பெற்றோர்களால்) தீர்மானிக்கப்படக்கூடியதாக ஒரு
குழந்தைக்கு நவக்கிரகங்களின் ஆதிக்கம் முழுமையாக இருந்த போதிலும், எண் கணிதத்தின் வாயிலாக
நான்கு கிரகங்களின் அதிக பட்ச ஆதிக்கத்தை ஏற்படுத்தும் பெயரோடும்
ஒப்புமைப்படுத்துகிறோம்.
அதிக பட்ச ஆதிக்கம் செலுத்தக் கூடிய கிரகங்களை கண்டறிய 14-05-1980-ல் பிறந்த ஒருவருடைய தேதியின் முதலில்
தேதி, ஒரு கிரகமாகவும்
விதி எண்,ஒரு கிரகமாகவும்
மாதம், ஒரு கிரகமாகவும்
கிழமை,ஒரு கிரகமாகவும்
எடுத்து கொள்ளப்படுகிறது.
விதி எண்,ஒரு கிரகமாகவும்
மாதம், ஒரு கிரகமாகவும்
கிழமை,ஒரு கிரகமாகவும்
எடுத்து கொள்ளப்படுகிறது.
பிறந்த தேதி என்பது 14 என்றால்
1+4=5 என்று புதன் கிரகம் எனவும்.
|
1 வந்தால்
|
சூரியன்
|
|
2 வந்தால்
|
சந்திரன்
|
|
3 வந்தால்
|
குரு
|
|
4 வந்தால்
|
இராகு
|
|
5 வந்தால்
|
புதன்
|
|
6 வந்தால்
|
சுக்கிரன்
|
|
7 வந்தால்
|
கேது
|
|
8 வந்தால்
|
சனி
|
|
9 வந்தால்
|
செவ்வாய்
|
என எடுத்துக் கொள்ளவேண்டும்.
விதி எண் என்பது :
பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தும் கூட்டி
வரக்கூடிய கூட்டு எண்ணே விதி எண்ணாக கொள்ளப்படும்.
14-05-1980
- 1+4+0+5+1+9+8+0
28 =
2+8 = 1 சூரியன்
என விதி எண்ணாக எடுத்துக் கொள்ளவும்.
மாதம் என்பது:
ஒரு பிறந்த மாதம் எதுவோ
அதையே கீழ்காணும்படி ஒரு கிரகமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
|
ஜனவரி (1)
|
- சனி (8)
|
|
பிப்ரவரி (2)
|
- சனி (8)
|
|
மார்ச் (3)
|
- குரு(3)
|
|
ஏப்ரல் (4)
|
- செவ்வாய் (9)
|
|
மே (5)
|
- சுக்கிரன் (6)
|
|
ஜூன் (6)
|
- புதன் (5)
|
|
ஜூலை (7)
|
- சந்திரன் (2)
|
|
ஆகஸ்ட் (8)
|
- சூரியன் (1)
|
|
செப்டம்பர் (9)
|
- புதன் (5)
|
|
அக்டோபர் (10)
|
- சுக்கிரன் (6)
|
|
நவம்பர் (11)
|
- செவ்வாய் (9)
|
|
டிசம்பர் (12)
|
- குரு(3)
|
என 5-வது மாதம் என்றால் மே
மாதத்திற்குரிய கிரகம் சுக்கிரன் என எடுத்து கொள்ளவும்.
கிழமையை:
|
ஞாயிறு
|
- சூரியன் (1)
|
|
திங்கள்
|
- சந்திரன் (2)
|
|
செவ்வாய்
|
- செவ்வாய் (9)
|
|
புதன்
|
- புதன் (5)
|
|
வியாழன்
|
- குரு(3)
|
|
வெள்ளி
|
- சுக்கிரன் (6)
|
|
சனி
|
- சனி (8
|
என எந்த கிழமையில்
பிறந்துள்ளார் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளவும்.
இவ்வாறு 4 கிரகங்களை கண்டுபிடித்து
அதற்குரிய கிரகங்களில் எந்த கிரகம் அவருக்கு வலிமையாக உள்ளதோ அந்த கிரகத்தைக்
கருத்தில் கொண்டு ஆராய்ச்சிக்குட்படுத்தி அந்த கிரகத்திற்கு ஒப்புமையான கிரகத்தை
எடுத்து பெயர் வைக்க கையாளவேண்டும். இதற்கு ஆராய்ச்சி தன்மையினை கொண்டே மிக
சிறப்பாக செயல்பட முடியும்.

No comments:
Post a Comment